
திருமணத்தின் முன்னரே அகத்தவத்தைத்
தொடங்கியவர் குழந்தைகளைப் பெற்றபோதும்
கருவினிலே அமைந்திட்ட தவத்தின் வித்து
களங்கத்தைப் போக்குவதில் திருப்பங்கொள்ளும்;
பெருநெறியாம் ஆன்மீக அறிவில் வாழும்
பெற்றோர்க்குப் பின்னர் வரும்குழந்தை எல்லாம்
திருநிலையாய் மெய்ப்பொருளை நாடிச் செல்லும்
தெய்வ உணர்வைப் பெறுவர், களங்கம் போகும்.