30 March 2026

ஆன்மாவே சிவம்

அகத்ததுவே தெய்வம் அதன் இயக்க மேன்மை

ஆன்மாவெனும் உயிராம் புலன்கள் மூலம்

அகம்படர்ந்து பலவடிவம் குணங்களாகி

அனுபவிக்கும் இன்பதுன்பம் மயக்கம் ஈதே

அகத்தவத்தால் அறிவு ஒன்றப் பழகும் போது

அமைதிநிலை கிட்டும். அங்கே உண்மை தோன்றும்.

அகத்தாய்வு வினைத்தூய்மை மனத்தில் தூய்மை

அளித்துயர்த்தும் அங்கான்மா சிவமாய் நிற்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top