01 April 2026

முழுமையும் அமைதியும்

அறிவு ஆளும் நிலையை எய்த பின்னர்

அதுமுழுமை பெற்றுத் தனையறியும் மட்டும்

அறிவிற்கு அமைதிகிட்டா; அவ்வப்போது

அதுதேவை, பழக்கம், சூழ்நிலைகட் கொப்ப

அறிவேதான் காம முதல் அறுகுணங்கள்

ஆகிவிளைவாய் இன்பதுன்பம் துய்த்து

அறிவுதன் மூலநிலை நோக்கி நிற்கும்

அதன்பிறகே முழுமைபெறும் அமைதி உண்டாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top