
தேவைகளை முறைப்படுத்து
தேவையுணர்வு, அறியாமை, பழக்கம் மூன்றாலே
தீங்கு தரும் பல செயல்கள் நிகழக்காண்போம்;
தேவைகளை விஞ்ஞானம் இயந்திரங்கள்
தீவிரமாய் தீர்த்து விடும் இந்தநாளில்
தேவையற்ற பலவற்றைத் தேவையாக்கும்
தெளிவில்லாக் கற்பனைகள் சிந்தித்தால்போம்;
தேவைகளை அளவு, முறை அறிந்து கொள்ளும்
திறம் கல்வி போதனையில் அமைய வேண்டும்.