
ஆன்மீக அறிவே அமைதி நல்கும்
உலகத்தில் அமைதியது உருவாகி நிலைக்க
உயிரறிவு இறையுணர்வு கடமையறம் எங்கும்
பலநாட்டு மக்களது வாழ்வினிலே பரவி
பண்பாடாய் ஊடுருவி நிலைக்கும் முறை வேண்டும்.
சிலதலைவர், அரசியலார், பொருள் துறையார், மதத்தார்
சேர்ந்தாலும் அன்னவரால் ஒருக்காலும் அமைதி
நிலவ வழியுண்டாகா, நீடிக்கும் பகை, போர்
நேர்வழியோ அறிவறியும் ஆன்மீக நெறியே.