21 April 2026

மாயை

சிவம் என்னும் பூரணத்தை வெளியென்றே உணர்வீர்;

சிறப்பான அதன் இயக்க ஆற்றல் அறிவாகும்;

சிவத்தினிட முதல் இயக்கம் சீர்மை பெற்ற விண்ணாம்;

சித்தரெல்லாம் சத்தியென்றார்; அந்தச் சத்திக்குள்ளே

சிவமமர்ந்து விளையாடும் சிறப்பதே பேரண்டம்;

சிற்றுருவாய் பிறப்பிறப்பு இடை வாழ்வதுவே உயிர்கள்;

சிவமறியும் பேரறிவைப் பெற்றவனே மனிதன்;

சிந்தனையால் உணரும்வரை சிதறும் மனம் மாயை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top