16 April 2026

திருவருள்

அவரவர்க்கு அவரேதான் உயர்ந்தோரென்று எண்ணும்

ஆணவமும் அறிவினது திருக்கூத்தில் ஒன்றே;

தவரவர்க்குத் தவத்தினது முழுமையினைக் காட்டித்

தான் அறிவாய் உளதுணர்த்தும்தரம் அறிவின்கூத்தே;

பவரவர்கள் படுகின்ற துன்பக்கடல் தாண்டப்

பண்பாட்டைத் துன்பவுணர்வின் வழியே காட்டிச்

சிவாவராய்த் தெளித்துய்யச் சிறந்த வழிகாட்டும்

திருவருளைப் பேரறிவைச் சிரம் வைத்துக் காப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top