
அருள்நெறி தழைத்தோங்கும்
மெய்ப்பொருளே தானாக அறிவாய் ஆற்றும்
மேன்மையினை உணர்ந்து விட்டார் பலர் என்றாலும்
அப்பொருளே அனைத்துயிராய் ஆற்றும் உண்மை
அறிந்துயிரோடு உயிர்இணைய அன்பு ஊற்றாம்;
இப்பெரிய தகைமையினைச் சிலரே பெற்றார்.
இனியும் சில ஆண்டுக்காலம் செல்லச் செல்ல
தப்பாது மக்களெல்லாம் மெய்யுணர்வார்
தழைத்தோங்கும் அருள்நெறி இவ்வுலக மெங்கும்.