
அறிவின் உயர்வில் பல படிகளில் மக்கள்
தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுக் கேற்ப
நாவை மனத்தைச் செயலைப் பயன்படுத்தும்
நற்பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன்வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டுக் கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன்னியல்பாய்ப் பழகிக் கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையொடு ஈகை செய்வோம்.