
பிறர் திணிக்கும் கருத்தை ஏற்பதா துறவு
பிச்சையெடுத்துண்டு வேதாந்தம் பேசி
பிழை செய்தே உயிர் வாழும் துறவு வேண்டேன்
அச்சமின்றி உழைத்து ஈட்டி உடலை ஓம்பி
அறம் நின்று அறம் உணர்த்தும் நெறியில் வாழ்வேன்
எச்செயலும் சிந்திக்காதாற்றுவோர்கள்
என்னை ஏழ்மை நிலையேற்று வாழச் சொன்னால்
உச்ச அறிவின் நிலையில் உலகில் வாழ்வோர்
ஒப்புவரோ பிறர் திணிக்கும் ஈனப்போக்கை