
கர்ம யோகம்
செயல் – விளைவு
செயல்பேச்சு இரண்டிற்கும் எண்ணம் மூலம்
சிந்தனையால் எண்ணத்தை ஆய்ந்து தேர்ந்து
செயல்களெல்லாம் நலமளிக்கும் வகையில் காத்தால்
சிவக்கருணை சீவனிலே துளிர்க்கும் அன்றோ?
செயல்களிலே விளைவாகச் சிவத்தின் செய்கை
சீரமையும் உண்மையினை உணர்ந்து போற்ற
செயல்களெல்லாம் சிவபூஜையாகும்; தேர்வோம்.
சிறுதெய்வம் சிலைமந்தரம் பொருள் வெற்றிக்கே