
இறைநிலை
இறையுணர்வார்சிலர் முயன்று வேத நூல்கள் மூலம்
இவ்விறையே அறிவுஎன உணர முடியாமல்
இறைவேறாய் அறிவு வேறாக எண்ணி எண்ணி
எழும்பிணக்கில் புரண்டு புரண்டே மயக்கில் மாள்வார்;
இறைநிலையே அறிவாக இயங்கும் உண்மை காண
ஏற்றதொரு சாதனைதான் அகநோக்குப் பயிற்சி
இறையறிவாய் உலகாக உயிர்களாகத் திகழும்
இந்த உண்மை உயிர்மீது மனம் ஒடுங்க ஒளிரும்.