
காரணமும் சூக்குமமும் தூலமும் விளங்க
காரணமே ஆதியாம் பேரறிவாம் தெய்வமாம்
காரணத்தின் பின்னநிலை சக்தி உயிராகும்
காரணமே உயிர்மூலம் ஒழுங்கமைப்பாய் ஆற்றும்
காரணமே உயிர்வழியே உடலில் உணர்வாகிக்
களிப்பு, வெறுப்பு, அமைதி, பேரின்பம் என ஆற்றும்
காரணத்தில் தெய்வமாய்ச் சூக்குமத்தில் உயிராய்க்
காணும் உடலில் உணர்வாய்த் திகழ்கின்றாய் நீயே.
Vazhga valamudan 🙏