
உய்யும் வழி
தவமுறையும் அற நெறியும் பற்றப் பற்றத்
தறுக் கென்ற தன்முனைப்புக் குன்றிப்போகும்
பவவினைகள் புதிது எழா; முன்னம்செய்த
பதிவுகளும் மறைந்து மெய்ப்பொருளும் காணும்
சிவ நிலையை சீவனிலே உணர்ந்து கொண்டால்
சிறுமை தரும் மனமயக்க மாயை ஏது?
எவரெனினும் இவ்வழியாலன்றி உய்ய
ஏது வழி வேறுலகில் எண்ணிப்பாரீர்.