05 May 2026

ஒழுக்கவழி

பெற்றவர்கள், குரு, அரசன், தெய்வமென்ற ஐவர்

பெருமதிப்பை உணர்ந்தறிவால் வணங்கி நலம் காண்போம்

சுற்றத்தார், தான், குடும்பம், சமுதாயம், உலகம்

சொல்லுமைந்து பிரிவினர்க்கும் கடமை செய்தேவாழ்வோம்;

நற்றவமாய் உயிருணர்ந்து நாடிநின்று மனத்தை

நல்முறையில் சீரமைத்து ஒழுக்க வழி வாழ்வோம்

கற்றவர்கள் கல்லாதோர் ஆண்கள் பெண்கள் வாரீர்

கருப்பு வெள்ளைத் தோல் நிறத்தோர்க்கு உலகமதம் ஒன்றே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top