
வேண்டுகோள்
இறைவா நற்கர்ம யோகம் உலக சமய மென்ற
எண்ணமதை என்னுளத்தே எழுப்பிவிட்டாய் அறிவேன்.
உறைவாய் என்னுளத்தறிவாய் உனக்கு எனைத்தந்தேன்;
ஒருசிறிய கருவியாக எனையுலகுக் காக்கு
முறையாகத் தலைவர்களை அறிஞர்களை இணைத்து
முழுஅளவில் மனிதகுலம் உணர்ந்து ஏற்கச் செய்வாய்
மறைவாக மாந்தருள்ளே அறிவாக உளநீ
மண்ணுலகில் மக்களிடம் பரவ விடல்வேண்டும்.