29 April 2026

கடவுள் தன்மை

கண்காது மூக்கு வைத்துக் கதைகள் சொல்லிக்

கருத்துக்குக் கடவுள்தனை சிறுமை யாக்கிப்

புண்பட்ட நெஞ்சங்கள் மேலும் புண்ணாய்ப்

போகும் வழியறியாது தவித்து வாழ்வில்

கண்கலங்கி நிற்போர்க்கும் கடவுள் தன்மை

கர்மத்தின் விளைவாக எழுந்தியங்கும்

உண்மையினை விளக்குவதே இக்காலத்திற்கு

ஒத்த உயிர்த் தொண்டாகும் உணர்வோம் செய்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top