
ஆனந்த அனுபவம்
கட்புலனால் காணுகின்ற பொருட்கள் ஊடே
கருத்தூன்றி விண்ணறிந்து அதற்குமூல
உட்பொருளாம் பரம்பொருளை உணர்ந்த போது,
உலகங்கள் தெய்வமயம்; உயிர்வகையாம்
லட்சங்கள் தெய்வமயம்; அகம் பரத்தில்
லயமாகும் அனுபவம் பேரின்ப மாகும்
அட்சரங்கள் கொண்டு எழுதமுடியாது இந்த
ஆனந்த அனுபவத்தை; மவுனமன்றோ!