
அருட்தொண்டு
குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்.
கடமைகளைச் சிந்தித்துச் செயலாற்றி உய்வோம்;
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருட் தொண்டாற்றி மகிழ்வோம்
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்.
மாநிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.