
இணக்க நெறி
நன்றி கடமையுணர்வு விளைவறிந்து
நலம்நாடிச் செயலாற்றும் நல்விழிப்பு
என்னும் ஒரே நீதியாய்ச் செயலுக்கேற்ப
இறைவனே விளைவுகளாம் உண்மை காணல்
தொன்று தொட்டு மனிதன் தொழும் இறைவன் அங்கு
தோற்றம் அவன் அறிவு ஒன்றே என்றுணர்தல்
இன்றுள்ள மதமனைத்தும் இணைத்துக் கொள்ளும்
இணக்கநெறி உலகமதம் கர்மயோகம்.